கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
தீங்கு நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
கடந்திட்ட பாதைகளை
நினைத்திடும்போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
Romans 5:6-8“You see, at just the right time, when we were still powerless, Christ died for the ungodly. Very rarely will anyone die for a righteous person, though for a good person someone might possibly dare to die. But God demonstrates His own love for us in this: While we were still sinners, Christ died for us.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: Songs list | Beulah's Blog
Pingback: as | Beulah's Blog