விந்தை கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
1. திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருப்பினும்
குருசை நோக்கி பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவநதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
தூய்மை யடைந்து மேன்மை யாகினேன்
3. சென்னி விலா கை கானின்று
சிந்துததோ துயரோ டன்பு
மன்னா இதைப்போன்ற காட்சி
எந்த நாளிலுமே எங்குமே காணேன்
4. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும்பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன்