உனக்கொரு நண்பன் இல்லை என்று
ஏங்குகின்றாயோ இப்பூமியிலே
1. அன்னையைப்போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திடுவார்
நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடவே மாட்டார்
தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார்
உனக்கொரு நண்பன் இயேசு உண்டு
அரவணைக்க ஒரு தகப்பன் உண்டு