1. உம்மைப் பாடாத நாவும்
கேளாத செவியும்
மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே
2. எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த
பரனைப் போற்றுவேன்
இயேசு பரனைப் போற்றிடுவேன்
3. இயேசு சிந்தின இரத்தம்
உந்தனுக்காக
சிலுவையண்டையில் வா
அவர் சிலுவையண்டையில் வா