போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே
1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..
ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே – 2
2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு
3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு