பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
1. அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி – 2
2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா
3. கல்வாரி சிலுவையினால்
என் சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா
4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து
உம் அன்பை ஊற்றினீரே
5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன்
என் உயிரான கிறிஸ்து வந்ததால்
உம் உறவுக்குள் வந்துவிட்டேன்