என் நேசர் நீர்தானையா
நேசிக்கின்றேன் உம்மைத்தானையா
1. எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடு இராவிலும் தியானிக்கின்றேன்
2. உமது இரத்தத்தால் என்னை மீட்டீர்
நன்றி இயேசையா
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே
3. துன்பமோ துயரோ வேதனையோ
உம்மைவிட்டு பிரிப்பதில்லை
உயிர் உள்ள வரை உம்மைத்தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன்