http://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்
என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்
1. வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
2. பட்டப்பகல் போல
(என்) நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன்
3. கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்
பாரங்கள் கவலைகள்
தள்ளாட விட மாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர்