https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTbab-iDmQSYR_VB
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீர் என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை
அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா
1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
2. ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்
3. வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே