https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdcE1hMGgxZTRfcjg/view?usp=sharing
பேசு சபையே பேசு – 4
இது உலர்ந்த எலும்புகள்
உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்
1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்
தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும்
2. மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும்
3. ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்
ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…
சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசு
சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று