https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc
பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடன் இல்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே
பெலன் தாருமே – 4
புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே
1. எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்துப்போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும்
2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
3. மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே
4. மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகின்றேனே
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே