கிருபையிதே தேவ கிருபையிதே

http://bit.ly/கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதெ
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1.ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியபாதையிலே ஏசுபரன்
அனுதினமும் வழிநடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே

2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக்காருமில்லை

3.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
அசையாது அழைப்பினைக் காத்துக்கொள்வோம்

4.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே
நிறுத்தினார் அவர் சுதராய்

5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கிறாரே வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்

கிருபை

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment