கரம் பிடித்து உன்னை

http://bit.ly/கரம்பிடித்து

கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே

1. படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

2. ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

3. சுழல்காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே

சங்கீதம் 40_2

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment